தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது!

மகாராஷ்டிரா மாநிலம் தாணே ரயில் நிலைய பிளாட்பாரத்தில், மீனாட்சி(24) என்கிற பெண்ணுக்கு நேற்றிரவு ரயில்வே பெண் காவலர்கள்,

News image
Updated On :22 ஜூன் 2017, 3:19 am

தாணே: மகாராஷ்டிரா மாநிலம் தாணே ரயில் நிலைய பிளாட்பாரத்தில், மீனாட்சி(24) என்கிற பெண்ணுக்கு நேற்றிரவு ரயில்வே பெண் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அரண் அமைக்க ரயில்வே மேடையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மீனாட்சியும் அவரின் கணவர் சந்தீஷ் ஜாதவ் நேற்றிரவு காட்கோபர் என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்காக, தாணே ரயில் நிலையத்தின் தடம் எண் 10க்கு வந்தனர். ரயில் ஏறுவதற்கு முன்னரே மீனாட்சிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உதவிக்காக அவரது கணவர் அழுதார், இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) அதிகாரி ஷோபா மோத்ஹி மற்றும் பெண் துப்புரவுப் பணியாளர்கள் ஒரு திடமான அட்டையை விரித்து அரண் போல நின்று மீனாட்சிக்கு பிரசவம் பார்த்தனர். மீனாட்சியின் அலறல் சத்தத்தில் ரயில் நிலையமே அதிர்ந்த சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மீனாட்சி.

பின்னர், பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாட்ஃபாரத்தில் பிறந்த அந்த அழகான குட்டி குழந்தையுடன் பெண் காவலர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நல் உள்ளம் கொண்டவர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.