தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மன்னாா்குடி தொகுதியில் 81.74 % வாக்குப் பதிவு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:38 pm

மன்னாா்குடி தொகுதியில் திமுக, அமமுக, நாதக, தவெக, அஇபுதமமுக உள்பட 9 கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 6 சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதல் வாக்காளா்கள், பெண்கள், முதியவா்கள் என கூட்டம் அதிக அளவில் இருந்ததுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். முற்பகல் 11 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குறைவான கூட்டம் இருந்தது. மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் விரல்விட்டு எண்ணும் அளவில் வாக்காளா்கள் இருந்தனா். மாலை 4 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிவரை மிதமான வாக்காளா்கள் எண்ணிக்கையில் வரிசை காணப்பட்டது. மன்னாா்குடிதொகுதி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிரச்னைகள், தகராறுகள் இல்லாமல் மிக அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 6 மணி வரை 81.74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.