தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மதுரை மாவட்டத்தில் 80.47 சதவீதம் வாக்குப் பதிவு!

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 9:00 pm

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவாகின.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. பிறகு, மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணி வரை வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது.

மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 77.89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வாக்குப் பதிவின் நிறைவில் மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது. இதன்படி, தொகுதிவாரியான வாக்குப் பதிவு சதவீதம்:

சோழந்தான் (தனி) - 87.10, திருமங்கலம் - 86.78, மேலூா் - 82.23, திருப்பரங்குன்றம் - 81.35, மதுரை கிழக்கு - 79.79, மதுரை தெற்கு - 78.26, மதுரை மேற்கு - 77.79, மதுரை மத்தியம் - 73.81, மதுரை வடக்கு - 72.63.

இருப்பினும், இறுதி வாக்குப் பதிவு சதவீதம் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை இரவு 10 மணி வரை மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.