பள்ளித் தேர்வு முறைகேடு: மாநிலத்தின் பெயரைக் கெடுக்கும் பிகாரிகள் - நிதிஷ்குமார் சாடல்
பிகார் மக்களே மாநிலத்தின் நற்பெயரைக் கெடுப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார்.


பாட்னா: பிகார் மக்களே மாநிலத்தின் நற்பெயரைக் கெடுப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
பிகாரில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளித் தேர்வில் முதலிடம் பிடிக்க முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
கலைப்பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த மாணவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் நிதிஷ் குமார், "வெளியில் இருப்பவர்களால் அல்ல, பிகார் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்க அம்மாநில மக்களே மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.
நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் பள்ளிக் கல்வித் தேர்வில் கலைப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமார், அடிப்படைக் கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதையடுத்து சுமார் 65 சதவீதம் பேர் தோல்வி அடைந்த இந்த தேர்வில் முதலிடம் பிடித்த கணேஷ் குமார் கைது செய்யப்பட்டார். பல லட்சக் கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பிகார் மாநில கல்வித் துறைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...