சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜெய்ப்பூரில் வினோதமான விபத்து: காருக்குள் சிக்கிய குதிரை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக வினோதமான சாலை விபத்து ஒன்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:40 pm

ANI


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக வினோதமான சாலை விபத்து ஒன்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து அல்ல அது, காரும், வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரையும் ஒரே சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போது நேரிட்ட மிக மோசமான விபத்தாக அது அமைந்தது.

ஜெய்ப்பூர் கிளப் அருகே காரும் குதிரையும் மோதிக் கொண்ட வேகத்தில் குதிரை காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சிக்கிக் கொண்டது.

முதலில் இந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டனர். பிறகுதான், காருக்குள் சிக்கிய ஓட்டுநரையும், குதிரையையும் மீட்க முயற்சித்தனர். இந்த விபத்தில் ஓட்டுநருக்கும் குதிரைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.