தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயம்

அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் பாபும் பாரே மாவட்டத்தில் 3 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான

News image
Updated On :5 ஜூலை 2017, 2:36 am

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் பாபும் பாரே மாவட்டத்தில் 3 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று செவ்வாய்கிழமை இரவு திடீரென மாயமானது.

சகலீ என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) மாயமாகியுள்ளதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மழை மற்றும் மோசமான வானிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலைகளில் வசிக்கும் பொதுமக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுமாறு அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக அருணாசலத்தில் உள்ள ஜிரோவிற்கு உள்ளூர் டிரி விழாவில் கலந்து கொள்ள சென்ற உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரை இறக்கப்பட்ட அதேநேரத்தில் தான் ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது.

உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பேரழிவை மேற்பார்வையிடவும், சீன-இந்திய எல்லைக்கு அருகே துணை ராணுவப் பணியாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.