தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கொல்கத்தா பாலம் இடிந்து விபத்து: பலி 18 ஆக உயர்வு

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

கொல்கத்தா: கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக திகழும் புராபஸார் பகுதியில் ரபீந்திர சாரணி மற்றும் கே.கே.தாகூர் சாலைகளை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் பாலம் கட்டுமான நடைபெற்ற பகுதிகளில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதி என்பதால், இடிந்து விழுந்த பகுதியில் 100க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். ஏராளமமான வாகனங்களும் பாலத்துக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அவைகளும் பலத்த சேமதடைந்தன.

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் வரை இறந்துள்ளதாக மேற்குவங்க மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்த 62 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம், இந்த விபத்தை 'கடவுளின் செயல்'  என வர்ணித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் 300 ராணுவ வீரர்கள் அடங்கிய 4 படையினரும், பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு மிதினாபுர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா, அதை ரத்து செய்துவிட்டு கொல்கத்தா திரும்புகிறார்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.

விபத்து குறித்து கேள்விபட்ட வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரமதர் மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே விபத்து குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.