புணேவில் கடந்த 2010ம் ஆண்டு ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் குற்றவாளியான மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஹிமாயத்துக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம், அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதாகவும், ஆனால், வெடிபொருட்களை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.எச். பட்டீல் மற்றும் எஸ்.பி. ஷுக்ரே ஆகியோர் கொண்ட அமர்வு மிர்ஸா ஹிமாயத் பெய்க்(33) மீது கொலை (302), கொலை முயற்சி (307), வெடிபொருள்களைப் பயன்படுத்தி சேதம் விளைவித்தல் (435) உள்ளிட்ட பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
அதே சமயம், போலி ஆவணம் தயாரித்தல் (474) உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் தண்டனையை உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையில் இரண்டு நேரடி சாட்சிகள், தங்களது முந்தைய வாக்குமூலம் மிரட்டிப் பெறப்பட்டதாகவும், தற்போது தங்களது வாக்குமூலத்தை புதிதாகப் பதிவு செய்யவும் மனு தாக்கல் செய்திருந்தது, ஹிமாயத்துக்கு சாதகமான தீர்ப்பை அளிக்க வகை செய்துள்ளது.
வழக்கின் பின்னணி:
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் 64 பேர் காயமடைந்தனர்.
இவ்வழக்கில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மிர்ஸா ஹிமாயத் பெய்க் (33) மீது கொலை (302), கொலை முயற்சி (307), வெடிபொருள்களைப் பயன்படுத்தி சேதம் விளைவித்தல் (435), போலி ஆவணம் தயாரித்தல் (474), மத, இன, பிறப்பிடம், மொழி அடிப்படையில் இருபிரிவினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் (153-ஏ), குற்றச்சதி (120-பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், கடந்த 2013ம் ஆண்டு ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


