குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

எளியவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு: ராகுல் காந்தி

எளியவர்களின் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நசுக்கி வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:43 pm

PTI

எளியவர்களின் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நசுக்கி வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் தன்னை தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர்களும் பாரதீய ஜனதா கட்சியினரும் தாக்கி வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

''சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் என்னை இன்று சந்தித்தனர். அவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுகின்றனர்''  என செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார் ராகுல்.

மக்களை அச்சுறுத்துவதாலும், தாக்குவதாலும் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை. ஹைதராபாத்தில் ரோஹித் வேமூலாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தில்லியில் கன்னையா குமாரும் நம்முடைய மாணவர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றார் ராகுல்.

யார் எல்லாம் தங்களது உரிமைக்காக போராடுகிறார்களோ அவர்களை எல்லாம் மோடி அரசு நசுக்கிறது. விவசாயிகள், தலித்துகள், மலைவாழ் மக்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட ஆதரவற்றவர்களின் கோரிக்கையை தேசிய ஜனநாய கூட்டணி அரசு ஒடுக்குகிறது. இவர்கள்தான் இந்தியாவின் வலிமை. இவர்களை ஒடுக்குபவர்கள் ஒரு போதும் எவ்வித நன்மையும் பெற முடியாது என்றார் ராகுல்.

கடந்த வாரம் மக்களவையில் பிரதமர் மோடி பேசிய 'சிலருக்கு வயதாகிவிட்டது ஆனால் அதற்குரிய பக்குவம் இல்லை' என்பதை குறிப்பிட்ட ராகுல், பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தன் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நாள்தோறும் தொடுத்து வருகின்றனர் என்றார்.

என் மீது எத்தகைய தாக்குதல்களையும் நடத்துங்கள்,எவ்வளவு நேரமானாலும் இழிவாக பேசுங்கள். ஆனால், எளியவர்களை ஒடுக்காதீர்கள் என்றார் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.