உத்தர பிரதேச மாநில பாஜக துணைத்தலைவராக இருந்தவர் தயா சங்கர் சிங். இவர் கடந்த வாரம் மாவ் என்ற இடத்தில்கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, பகுஜன் சமாஜ் க ட்சித் தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிட சீட் அளிக்கும் முறையை விமர்சித்துப்பேசினார். அப்பொழுது அவர் மாயாவதியை 'பாலியல் தொழிலாளி' என்னும் பொருள்பட விமர்சித்துப் பேசினார். இது பகுஜன் சமாஜ் க ட்சித் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. தயா சங்கருக்கு எதிராக , பகுஜன் சமாஜ் தேசிய செயலாளர் மேவலால் கவுதம், ஹஸ்ரத்கஞ் ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.பாஜக மேலிடம் அவர் மீது நடவடிகை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியது.