நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாநில அரசுகளுக்கு மோடி வேண்டுகோள்
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், மத்திய அரசுடன் இணைந்து தங்களுக்கு கிடைக்கும் புலனாய்வு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த இயலாது என்று டில்லியில் இன்று நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.










