டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

துருக்கியில் ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 754 பேர் கைது

துருக்கியில் ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 754 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:43 pm

IANS

அங்காரா: துருக்கியில் ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 754 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அரசைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து, இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் அங்காரவில் கலவரங்கள் வெடித்து வருகின்றது.

இந்நிலையில், ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 754 ராணுவ அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராணுவ புரட்சியில் ஏற்பட்ட கலவரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.