டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் பலி !

உத்தரப்பிரதேசத்தின் இத்தா மாவட்டத்தில் வெள்ளி இரவு கள்ளச்சாராயம் குடித்த விபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். மேலும் பலருக்கு கண் பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:43 pm

IANS

உத்தரப்பிரதேசத்தின் இத்தா மாவட்டத்தில் வெள்ளி இரவு கள்ளச்சாராயம் குடித்த விபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். மேலும் பலருக்கு கண் பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் இத்தா மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச்  பகுதியில் உள்ளது ஜோஹ்ரி தர்வாசா  கிராமம். இங்கே வெள்ளி இரவு உள்ளூர்வாசிகள் சிலர் ஒன்று கூடி மது அருந்தினார்கள்.   அவ்வாறு மது அருந்தியவர்கள் சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்தல், குமட்டல் மற்றும் பார்வை மங்குதல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு  அழைத்தது செல்லப்பட்டார்கள்.  அவர்களில் ஐந்து பேர் மருத்துவமனையிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்கள்.

இறந்தவர்கள் ராம் அவதார் அதீக் , ரமேஷ், சர்வேஷ் மற்றும் நேத்ரபால் ஆகியோராவார்கள். கண்பார்வை இழந்தவர்களில் நரேஷ், விஜய், சர்வேஷ் , கல்லு மற்றும் அர்விந்த் ஆகியோர்கள் அடங்குவார்கள்.

சம்பவம் குறித்து அறிந்ததும் கடும் கோபமடைந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மாவட்ட நீதிபதி, மாவட்ட கலால் அலுவலர்,  சரக அலுவலர்  மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களை இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.