ஏழாவது ஊதியக் குழு அறிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 50 சத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னதாக புதுதில்லியில் உள்ள ஜந்தர் மாந்தர் மற்றும் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அருகே நவம்பர் 19 ஆம் தேதி தர்னா போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளனர்.