ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென் தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை புதன்கிழமையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:27 am

PTI

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை புதன்கிழமையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகத்தின் கடலோரம் மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள், கேரள  உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை இடியுடன் கனமழை பெய்யும். தெலுங்கானாவை பொறுத்தவரை வறண்ட வானிலையே தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. மயிலை (கன்னியாகுமரி), மேலூர் (மதுரை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.