நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குடிபோதையில் பெண்ணை பலாத்காரம் செய்த மும்பை காவலர் கைது

மும்பை காவல்துறையில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவர், குடிபோதையில் ஒரு பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த குற்றத்துக்காக

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:27 am

PTI

மும்பை காவல்துறையில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவர், குடிபோதையில் ஒரு பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த குற்றத்துக்காக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தேரியின் மோரல் பகுதியில், ஒரு பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்ததாக தலைமைக் காவலர் பிரவீன் நலவாடே மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரை நேற்று இரவு உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மும்பை காவல்துறை இணை ஆணையர் தேவன் பாரதி நடவடிக்கை எடுத்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நேரிட்டதாகவும், சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு குரல் கொடுக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்த பெண்ணை மீட்டு, தலைமைக் காவலரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.