கோவா மாநிலத்தில் கடற்கரையில் பணியாற்றும் மீட்புக் குழுவினர் (Life Guards) தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர். தங்களது பணியை வரையறை செய்ய வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 650 மீட்புக் குழுவினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக மீட்புக் குழுவினருக்கான தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். அதே நேரத்தில், அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் அனைத்து மீட்புக் குழுவினரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என கூறினர்.
கோவா மாநிலத்தின் 105 கி.மீ. நீள கடற்கரை முழுவதிலும், மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளிலும் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடல் மற்றும் ஆறுகளில் குளிக்கும்போது, தண்ணீரில் சிக்குபவர்களை மீட்பது இவர்களின் பிரதான பணியாகும்.
மீட்புக்குழுவினர் தங்கள் பணியை வரையறை செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கினர்.
அனைத்து மீட்புக் குழுவினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது காலவரையற்ற வேலைநிறுத்தமாகும். கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மீட்புக் குழுவினர் இணைந்துள்ள ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகி கிரிஸ்டோபர் பொன்சேகா கூறினார்.
ஆனால், அனைத்துப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மீட்புப் பணியில் எவ்வித இடையூறும் இல்லை என அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள திருஷ்டி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளவர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்தையும் அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் திலீப் பாருலேகர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


