தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா: ராஜ்நாத் சிங்

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என ராஜ்நாத் சிங் கூறினார்.

News image
Updated On :28 டிசம்பர் 2015, 9:52 am

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பயங்கரவாதம், தீவிராவதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளோம். இது தொடருமானால் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற முடியும்.

தேசிய புலனாய்வு அமைப்பு சிக்கல்கள் நிறைந்த குற்ற வழக்குகள், பயங்கராவதம், தீவிரவாதம் மற்றும் மவோயிஸ்ட் குறித்த வழக்குகளில் உலக அளவில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் பங்கு மிகுந்த சாவல்கள் நிறைந்ததாக உள்ளது.

இன்றைய குற்றவாளிகள் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தும் நிலையில், விசாரணை அமைப்புகள் பழைய முறையை கையாள முடியாது. எனவே, புலனாய்வு அமைப்புகளும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய நாட்டு மக்களுக்காக மட்டுமன்றி, உலக அரங்கிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும், அது, நடுநிலை மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த புலனாய்வு அமைப்பாக உலக அரங்கில் பெயரெடுத்துள்ளது.

உலகிற்கே பயங்கர அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகள் இந்தியாவில் ஏறக்குறைய இல்லை. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை அந்த அமைப்புகளுக்கு செல்வதை தடுத்துவிட்டனர். இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்திய மதிப்புகளில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக இமாம்கள் நடத்திய பேரணியே இதற்கு சான்று.

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான்.

இந்தியா எப்போதும் சகிப்புதன்மை மிகுந்த நாடாகவே இருக்கிறது. பார்சிகள் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியபோது, இந்தியா அவர்களுக்கு மரியாதை அளித்து பாதுகாப்பு அளித்தது என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.