கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா: ராஜ்நாத் சிங்

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என ராஜ்நாத் சிங் கூறினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:55 am

PTI

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பயங்கரவாதம், தீவிராவதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளோம். இது தொடருமானால் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற முடியும்.

தேசிய புலனாய்வு அமைப்பு சிக்கல்கள் நிறைந்த குற்ற வழக்குகள், பயங்கராவதம், தீவிரவாதம் மற்றும் மவோயிஸ்ட் குறித்த வழக்குகளில் உலக அளவில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் பங்கு மிகுந்த சாவல்கள் நிறைந்ததாக உள்ளது.

இன்றைய குற்றவாளிகள் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தும் நிலையில், விசாரணை அமைப்புகள் பழைய முறையை கையாள முடியாது. எனவே, புலனாய்வு அமைப்புகளும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய நாட்டு மக்களுக்காக மட்டுமன்றி, உலக அரங்கிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும், அது, நடுநிலை மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த புலனாய்வு அமைப்பாக உலக அரங்கில் பெயரெடுத்துள்ளது.

உலகிற்கே பயங்கர அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகள் இந்தியாவில் ஏறக்குறைய இல்லை. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை அந்த அமைப்புகளுக்கு செல்வதை தடுத்துவிட்டனர். இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்திய மதிப்புகளில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக இமாம்கள் நடத்திய பேரணியே இதற்கு சான்று.

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான்.

இந்தியா எப்போதும் சகிப்புதன்மை மிகுந்த நாடாகவே இருக்கிறது. பார்சிகள் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியபோது, இந்தியா அவர்களுக்கு மரியாதை அளித்து பாதுகாப்பு அளித்தது என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.