தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜல்லிகட்டு: புத்தாண்டில் நல்ல செய்தி - அமைச்சர் ஜவடேகர்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை மீண்டும் நடத்துவது குறித்த நல்ல செய்தி புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் என

News image
Updated On :28 டிசம்பர் 2015, 1:13 pm

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை மீண்டும் நடத்துவதற்கான வழிமுறைகளை அரசு ஆய்ந்து வருகிறது. புத்தாண்டு அன்று நல்ல செய்தி அறிவிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:

விலங்குகளை சித்ரவதைக்கு உள்ளாக்காமல் பராம்பரிய வழக்கங்களை தொடர்வதற்கு அரசு அனுமதி அளிக்கும்.

தமிழகத்தின் ஜல்லிகட்டு, மகாராஷ்டிரவின் மாட்டுவண்டி பந்தயம், கர்நாடகாவின் கம்பாலா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் சில இடங்களில் நடைபெறும் மாட்டுவண்டி போட்டிகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய, கலாச்சார முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய கலாச்சாரங்களை மத்திய அரசு மதிக்கிறது. அதே நேரத்தில் விலங்குகளை வதைக்கக் கூடாது.

பாரம்பரிய வழக்கங்களை தொடருவதற்கு தேவையான வழிவகைகளை அரசு ஆய்ந்து வருகிறது. இதுகுறித்து நல்ல செய்தி வரும் புத்தாண்டு தினத்தன்று அறிவிக்கப்படும்

விலங்குகளை கொண்டு நடத்தப்படும் இத்தகைய விழாக்களை தொடர்ந்து நடத்துவதற்கு 'சில காலம்' அனுமதி அளிக்கப்படும் என்றார்.

ஜல்லிகட்டு உள்ளிட்ட விலங்குகளை கொண்டு நடத்தப்படும் விழாக்களை தொடர்ந்து நடத்துவதற்கான 'நிர்வாக ஆணை' வருகிற ஜனவரி 1 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.