ஜார்கண்ட் பேரவை இடைத் தேர்தல்: காங்கிரஸ் வெற்றி
ஜார்கண்ட் மாநிலம் லோகர்டாகா பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


ஜார்கண்ட் மாநிலம் லோகர்டாகா பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜார்கண்ட் மாநில பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி.
இக்கூட்டணியைச் சேர்ந்த 'ஆல் ஜார்கண்ட் ஸ்டூடன்ட் யூனியன்' கட்சியைச் சேர்ந்த கமல் கிஷோர் பகத், லோகர்டாகா பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு மருத்துவர் ஒருவரை தாக்கிய வழக்கில் கமல் கிஷோருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதவி பறிக்கப்பட்டால், அத்தொகுதியில் டிசம்பர் 14 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில், ஜார்கண்ட் மாநிலத் தலைவர் சுகதோ பகத்தும், பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான 'ஆல் ஜார்கண்ட் ஸ்டூடன்ட் யூனியன்' சார்பில் பதவி பறிக்கப்பட்ட கமல் கிஷோரின் மனைவி நீரு சாந்தியும் போட்டியினர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் 73,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாந்திக்கு 50,571 வாக்குகள் கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...