உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய துணை ராணுவப் படை(சிஆர்பிஎப்) -இல் நிரப்பப்பட உள்ள காவலர் பணியிடங்கள் குறித்து...

News image

மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள் - சிஆர்பிஎப்

Updated On :29 ஏப்ரல் 2026, 8:17 am

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய துணை ராணுவப் படை(சிஆர்பிஎப்) -இல் நிரப்பப்பட உள்ள 9,195 காவலர் (தொழில்நுட்பம், வர்த்தகப் பணியாளர்கள் மற்றும் முன்னோடிப் பிரிவு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இரு பாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

பணி: Constable (Technical & Tradesmen)

காலியிடங்கள்: 9197

சம்பளம்: மாதும் ரூ.21,700 - 69,100

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Mason, Cook பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவ சான்றுடன் விண்ணப்பிக்கவும். Barber, Washermen, Water Carrier, Safai Karmchari பணிகளுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி ஓட்டுநர் பணிக்கு 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ.உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ. அகலமும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்தபட்சம் 157 செ.மீ.உயரம் இருக்க வேண்டும்.

குறிப்பு: எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ. உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ. இருக்க வேண்டும். 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப் படுவர்.

தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம் அட்ட வணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

உடற்திறன் தேர்வில் ஆண்கள் 5 கி.மீ. தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 1.6 கி.மீ.தூரத்தை 8.30 நிமிடங்களிலும் ஓடி கடக்க வேண்டும். உடற்தகுதித் தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rect.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The CRPF – Central Reserve Police Force has released its latest official recruitment notification to fill the 9195 Constable (Technical & Tradesmen and Pioneer) (Male/Female)Posts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.