சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி தொகுதி- 5ஏ இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:49 pm

தினமணி


தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி தொகுதி- 5ஏ இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: உதவிப் பிரிவு அலுவலர் - 74
பணி: உதவிப் பிரிவு அலுவலர் - 29
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,34,200

பணி: உதவியாளர், தலைமைச் செயலகம் - 49
பணி: உதவியாளர் - 09
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 73,700

தகுதி: வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40க்குள்ளும், பிற பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
 
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I பொதுத் தமிழ் 18.12.2022 அன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை.  தாள்-II பொது ஆங்கிலம் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/21_2022_Group_V_A_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.