தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ரயில் நிலைய இலவச வைஃபையில் படித்து அரசு அதிகாரியாக அமரப்போகும் ரயில்வே கூலித் தொழிலாளி!

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ள ஸ்ரீநாத், இலவச வைஃபை மூலம் பாடங்களை படித்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:00 pm

ஆர். வெங்கடேசன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ள ஸ்ரீநாத், இலவச வைஃபை மூலம் பாடங்களை படித்து அரசுப்பணிக்கான போட்டித்தேர்வில் வென்றுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்திலும் இந்த சேவை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு கனரக சாமான்களை சுமக்கும் கூலி தொழிலாளியான ஸ்ரீநாத் என்பவர் இலவச வைஃபை சேவை மூலம் அரசு அதிகாரியாக அமர உள்ளார்.

கேரள மாநிலம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் பிளஸ் டூ முடித்த பின்னர், அடுத்து படிக்க வசதி இல்லாததால் மூணாரிலிருந்து மிக அருகில் உள்ள ரயில் நிலையம் எர்ணாகுளம் ரயில் சந்திப்பு. இங்கு கனரக சாமான்களை சுமந்து செல்லும் கூலித் தொழிலாளியாக தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார் ஸ்ரீநாத். அவர், அரசுப் பணிகளுக்காக கேரள அரசு சார்பில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தற்போது வெற்றிபெற்றுள்ளார்.  

அரசுப் பணி தேர்வுக்காக, எர்ணாகுளம் நிலையத்தில் கிடைக்கும் இலவச வைஃபை சேவையை ஸ்ரீநாத் தனது செல்போனில் இணைத்து, ஒரு ஹெட்செட் மூலம் பாடங்களை கேட்டு படித்து வந்துள்ளார். 

மேலும் பழைய வினாத்தாள், கேள்விகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து ஓய்வு நேரத்தில் படித்துள்ளார். இணையதளங்களில் போட்டித்தேர்வுக்கான பாடங்கள் ஆடியோவாக கிடைக்கும் நிலையில், சுமை தூக்கிச்செல்லும் போது கூட பாடங்களை மனதில் உள்வாங்கியுள்ளார். சமீபத்தில், கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில், ஸ்ரீநாத் இந்த தேர்வில் வெற்றிபெற்றுளளார்.

நேர்முகத்தேர்விலும் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுவிட்டால், நில அளவைத்துறையில் கள உதவியாளர் பணி அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வு மட்டுமல்லாமல் ரயில்வே துறையில் நடக்க உள்ள 62 ஆயிரம் பணியிடங்களுக்கான குரூப் டி பணிக்கும் அவர் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது வெற்றி குறித்து ஸ்ரீநாத் கூறுகையில், 'மூன்று முறை அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதியுள்ளேன். இந்தமுறைதான், ரயில் நிலையத்திலுள்ள வை-ஃபை வசதியைப் பயன்படுத்திப் படித்து, தேர்வை சந்தித்ததில் வெற்றி பெற்றுள்ளேன். 

மூட்டை தூக்கும்போது, படிப்பு சார்ந்த பதிவுகளை செல்போனில் ஓடவிட்டு, ஹெட்போனை மாட்டிக்கொண்டு உள்வாங்கிக்கொள்வேன். என்னுடைய கவனம், அதைக் கேட்பதில்தான் இருக்கும். இந்த முறையில்தான் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். இரவில் ஓய்வாக இருக்கும்போது, படித்ததை நினைவுபடுத்திக்கொள்வேன் என்று தெரிவித்தார். 

2018-ஆம் ஆண்டு மே மாதம் வரை 685 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை தொழில்நுட்பத்தை பெற்றுளளது. இந்திய ரயில்வே 2019 மார்ச் மாதத்திற்குள் 700 கோடி ரூபாய் செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை தொழில்நுட்பத்தை அமைக்கப்படவுள்ளது.

முதிரபுழா, நல்லதன்னி மற்றும் குண்டலி ஆறுகள் என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமே மூணாறு என்ற பெயரில் என்றழைக்கப்படுகிறது.

திறமைக்கு வறுமை ஒரு தடையில்லை என்பதை நிருபித்துள்ள ஸ்ரீநாத்துக்கு நமது வாழ்த்துக்களை உரிதாக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.