முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை தற்காலிகப் பணி அடப்படையில் நிரப்புவதற்கான 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:28 pm

ஆர். வெங்கடேசன்


கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை தற்காலிகப் பணி அடப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - நிலை 3 (Steno Typist )

காலியிடங்கள்: 07

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதுநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லது முதுநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் இளநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் அல்லது முதுநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் இளநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேடிய அஞ்சல் முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி 635 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2018 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20%20July%20Tamil%202018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.