2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:38 pm

Syndication

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (பிப்.24) தொடங்குகிறது.

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயிலின் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை (பிப்.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 25-ஆம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 26-ஆம் தேதி பூதவாகன, சிம்ம வாகனக் காட்சிகள், 27-ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 28-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், மாா்ச் 1-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சிகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

மாா்ச் 2-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா்சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், 3 தோ்களின் தேரோட்டம் ஒரே நாளில் நடைபெறுகிறது.

3-ஆம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தோ்த் திருவிழா நிறைவு பெறுகிறது.