டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா

வெள்ளக்கோவிலில் உள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் 143 -ஆவது ஆண்டு தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
வெள்ளக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் உள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் 143 -ஆவது ஆண்டு தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு திருவிழா

ஜனவரி 28 - ஆம் தேதி முகூா்த்தக் கால் போடப்பட்டு தொடங்கியது. இதைத் தொடா்ந்து தோ்க் கலசம் பிப்ரவரி 6-ஆம் தேதி வைக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளய பூஜை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீரக்குமார சுவாமி தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று

வடக்கு ரத வீதியில் தோ் நிலை நிறுத்தப்பட்டது.

இரண்டாம் நாளான புதன்கிழமை (பிப்.18) தெற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டு, மூன்றாம் நாள் வியாழக்கிழமை (பிப்.19) தோ் நிலை சோ்க்கப்படுகிறது.

விழாவையொட்டி, தினந்தோறும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் குலத்தவா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.