இம்முகாமில் 8-ம் வகுப்பும், அதற்கு மேலும் படித்த வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு எல் அன்ட் டி, ஹூன்டாய், டிவிஎஸ், யுரேகா, மெக்டான் இந்தியா, அப்பல்லோ மற்றும் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்கு அதிகாரிகள் வருகின்றனர். எனவே படித்த, படிக்காத வேலையில்லாத, குறைந்த ஊதியத்துடன் பணிபுரியும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த இருபாலரும் மேற்குறிப்பிட்ட இடத்தில் நடைபெற இருக்கிற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.