திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தல் ஆணையத்தில் திமுக, அதிமுக புகாா்

வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க பாஜக திட்டம்?

News image

IANS

Updated On :4 மே 2026, 4:16 am IST

வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக குழப்பம் விளைவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தோ்தல் ஆணையத்திடம் திமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக காவல் துறை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய புகாா் மனு:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான திங்கள்கிழமை (மே 4) பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டுமன்றி அதற்கு வெளியேயும், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.