தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

சமாஜவாதி பிரமுகரும், காங்கிரஸ் நிர்வாகி சல்மான் குர்ஷித் உறவினருமான மரியா ஆலம் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

News image
Updated On :2 மே 2024, 9:18 am

வாக்கு ஜிஹாத் நடத்தி இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி பிரமுகர் பேசியதை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

குஜராத்தில் வருகின்ற 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சபர்காந்தா மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வாக்கு ஜிகாத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடி பேசியதாவது:

“இந்தியா கூட்டணியின் தலைவர் ஒருவர் முஸ்லிம் மக்கள் வாக்கு ஜிகாத் நடத்தி இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசுகிறார். இது படித்த குடும்பத்திலிருந்து வந்தவர் பேசியது, மதரஸாவிலிருந்து வெளிவரும் குழந்தை பேசியது அல்ல. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கூட்டணி கூறுகிறது.

இந்தியா கூட்டணியினர் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அவமதித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? ஒருபுறம் இந்தியா கூட்டணியினர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களின் இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கும் சூழலில், மறுபுறம் வாக்கு ஜிகாத்துக்கான முன்னெடுப்பை எடுத்துள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் "இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக "வாக்கு ஜிஹாத்' நடத்தி அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை சமாஜவாதி கட்சிப் பிரமுகரான மரியா ஆலம் பேசியது சர்ச்சையானது. மரியா ஆலம், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் உறவினராவார்.

மரியா ஆலமின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக ஆனந்த் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் தலைவர்கள் அவர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என்று விமர்சித்தார்.

மேலும், “பலவீனமான காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தலைவன்களுக்கு ஆதாராங்களை வழங்கினர். ஆனால், பாஜக அரசு அவர்களின் மண்ணிலேயே பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. காங்கிரஸ் அழிவை கண்டு பாகிஸ்தான் அழுகிறது.” என விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் முத்திரை இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவரின் சொத்துகளையும் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கிவிடுவார்கள் என்றும், மத அடிப்படையில் காங்கிரஸ் இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுருப்பதாகவும் அடுக்கடுக்கான மோடியின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.