பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு சென்னை ஐஐடி அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இவை 8 வார காலப் படிப்புகளாகும். இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் மூலமாகவும் இதற்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
பள்ளிக் கல்வியை பயிலும் மாணவர்கள் உயர் கல்வியில் எந்த விதமான துறையை தெரிவு செய்வது என அறியும் வகையில் இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, விண்ணப்பிக்க https://code.iitm.ac.in/schoolconnect/program என்ற இணையதளத்தில் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









