வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி... - ANI

Updated On :1 ஜூலை 2026, 9:14 pm IST

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுச் செயலரான 1989 ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14 ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவு செயலராகப் பதவி வகித்து வரும் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் வரும் 2027 ஜூலை 14 ஆம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நீட்டிக்கப்படுவதாக, அமைச்சரவையின் நியமனக் குழு இன்று (ஜூலை 1) அறிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் போர், வளைகுடா நாடுகள் இடையே நிலவும் பதற்றமான சூழல் ஆகியவற்றுக்கு இடையே இந்திய வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துவதற்கு விக்ரம் மிஸ்ரியின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, இந்திய வெளியுறவுச் செயலராகக் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் ஐஎஃப்எஸ் அதிகாரி விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான், ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இந்திய பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.

மேலும், மியான்மர் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராகவும் அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The tenure of Union Foreign Secretary Vikram Misri has been extended by another year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.