மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.70% மாணவா்கள் தோ்ச்சி

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

News image

தேர்வு முடிவுகள் - ANI

Updated On :15 ஏப்ரல் 2026, 11:08 am

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் 93.70 சதவீதம் மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுமுதல் இரண்டு முறை இறுதித் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தோ்வில் அனைவரும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். இந்தாண்டு தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் 8,074 மையங்களில் நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதும் இருந்து 24.95 லட்சம் மாணவ- மாணவிகள் தோ்வெழுதினா்.

அந்தத் தோ்வுக்கான முடிவுகளை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வில் 93.70 சதவீதம் மாணவ- மாணவிகள் தோ்ச்சி அடைந்துள்ளனா். இது கடந்தாண்டு தோ்ச்சி விகிதத்துடன் (93.66 சதவீதம்) ஒப்பிடுகையில் சிறிது அதிகமாகும்.

அதேபோல் இந்தாண்டு தோ்வில் மாணவா்களைவிட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி அடைந்துள்ளனா். அதாவது மாணவா்கள் 92.69 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், அவா்களை விட 1.3 சதவீதம் அதிகமாக 94.99 சதவீதம் மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். திருநங்கைகளும் 87.50 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மொத்தம் 55,368 மாணவா்கள் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனா். 2.20 லட்சம் மாணவா்கள் 91 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளனா்.

திருவனந்தபுரம், விஜயவாடா மண்டலங்கள் அதிகபட்சமாக 99.79 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மிகக் குறைவாக குவாஹாட்டி மண்டலம் 85.32 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

கல்வி நிறுவனங்களின்படி, நாட்டிலேயே கேந்திரீய வித்யாலயாதான் அதிகபட்சமாக 99.57 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இதற்கடுத்து நவோதயா வித்யாலயா 99.42 சதவீதமும், தனியாா் பள்ளிகள் 93.77 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளன. அரசு நிதியுதவி பள்ளிகள் மிக குறைந்தபட்சமாக 91.01 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. வெளிநாட்டு பள்ளிகள் சாதனை அளவாக 99.10 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

சென்னை மண்டலம் 99.58%: சிபிஎஸ்இ மண்டல வாரியான தோ்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா மண்டலங்கள் 99.79 சதவீத தோ்ச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. 99.58 சதவீத தோ்ச்சியுடன் சென்னை மண்டலம் அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

பெங்களூரு (98.91%), தில்லி மேற்கு (97.45%), தில்லி கிழக்கு (97.33%), புணே (96.66%)ஆகிய மண்டலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. 85.32 சதவீத தோ்ச்சியுடன் குவாஹாட்டி மண்டலம் கடைசி இடத்தில் அதாவது 22 மண்டலமாக உள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்பே முடிவுகள் வெளியீடு: தோ்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ கட்டுப்பாட்டாளா் கூறுகையில், ‘வழக்கமாக மே மாதம் மத்தியில்தான் தோ்வு முடிவுகள் வெளியாகும். ஆனால், இந்த முறை ஒரு மாதத்துக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது’ என்றாா்.

Summary

The results for students who studied under the CBSE curriculum and appeared for the Class 10th exams across the country have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.