"கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை ஆகியவற்றுக்கு கீழே கர்நாடகத்தில் வேறு அணைகள் இல்லை. மேக்கேதாட்டு அணை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீரை ஒழுங்குபடுத்தலாம்' என்கிறார் கர்நாடக முதல்வர். அதாவது, இயற்கை அதிக மழை தந்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், கிருஷ்ணராஜசாகரும் கபினியும் தேக்கி வைக்க முடியாமல் வேறு வழியின்றித் திறந்துவிடப்பட்டாலும், மேக்கேதாட்டுவில் அதைத் தேக்கி, திருப்பி விடுவதோடு, தமிழ்நாட்டுக்கு காவிரி ஆணையம் நிர்ணயித்த அளவுக்கு மேலாக துளி நீர்கூட சென்றுவிடக் கூடாது என்பதைத்தான், தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீரை ஒழுங்குபடுத்தலாம் என்று அவர் தெரிவிக்கிறார்.