கடந்த முன்று நான்கு ஆண்டுகளில், ஈரானிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு 4,26,000 பேரல்களிலிருந்து 2,63,000 பேரல்களாகக் குறைத்து விட்டிருக்கிறது. நமக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் சவூதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஈரான் இப்போது ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இராக், வெனிஸýலா போன்ற நாடுகள் அந்த இடத்தை நிரப்பி இருக்கின்றன. ஈரான் மீதானப் பொருளாதாரத்தடை தொடர்ந்தாலும் நமக்கு பாதிப்பு இல்லை என்றாலும், தடை அகன்றால் நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லது. காரணம், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் வரவு அதிகரித்தால் விலை குறையும். நமது அந்நியச் செலாவணி இழப்பு அதன் மூலம் குறையும்.