கோத்ரா கலவரத்தை அடக்காமல் வேடிக்கை பார்க்கச் சொன்னதாக குஜராத் முதல்வர் மோடி என்னிடம் கூறினார் என்று இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதும், ஓய்வு பெற்று வெளியே வந்த பிறகு ராணுவத்தில் ஊழல் நடந்தது என்று பேசுவதும், கொலை செய்த நபரை பிடிக்க முடியாமல் அப்பாவிகள் இருவரைப் பிடித்து சிறையில் அடைத்தேன் என்று பல ஆண்டுகள் கழித்து ஒப்புக்கொள்வதும், வாக்குமூலத்தைத் திருத்தினேன் என்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதும், அதிகாரிகளை நேர்மையானவர்களாகவோ, மரியாதைக்குரியவர்களாகவோ ஆக்காது. சட்டமும் இவர்களுக்குத் துணை நிற்காது. சுய விளம்பரம் தேடிக் கொள்ளவும், அரசியல் சாயம் பூசிக் கொள்ளவும்தான் இவை உதவும்.