யாராக இருந்தால் என்ன?
விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம்.










