தவறான வாக்குறுதிகளாலும், வாக்காளர்களை விலைபேசும் கீழ்த்தரமான நடவடிக்கைகளாலும் மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்க முற்படுபவர்கள் கருத்துக் கணிப்புகளாலும், ஊடகச் செய்திகளாலும் வாக்காளர்கள் திசைதிருப்பப்பட்டு விடுவார்கள் என்று கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி போன்ற எல்லா மேலைநாடுகளிலும் பரவலாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கணிப்புகளை உலகமயம் பற்றியும், சந்தைப் பொருளாதாரம் பற்றியும் பேசும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதுதான் நகைமுரண். ஒன்று நன்றாகவே புரிகிறது. காங்கிரஸ் பயந்துபோய் இருக்கிறது என்பதுதான் அது!