அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அன்றைய இந்தியாவின் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் அணிசாராக் கொள்கை, இந்தியாவுக்கு வளர் பொருளாதார நாடுகளின் தலைமையைப் பெற்றுத் தந்தது. 1961இல் யுகோஸ்லோவாகியத் தலைநகர் பெல்கிரேடில், இந்தியாவின் பிரதமர் பண்டித நேரு, இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ, எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், கானா அதிபர் கிவாமே நிக்ரூமா, யுகோஸ்லோவாகிய அதிபர் ஜோசப் டிட்டோ ஆகியோர் கூடி மூன்றாவது உலக நாடுகளின் அமைப்பை உருவாக்க முற்பட்டனர் என்றால், அது அன்றைய இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.