பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாகத்தான், தங்களது பாதுகாப்பைக் கருதி தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், பிற நாடுகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவிக்கிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தங்களது உளவுத்துறை வரம்பு கடந்து விட்டதாகவும், சில விதிமுறைகளையும் கட்டுப்பாட்டையும் விரைவிலேயே ஒபாமா அரசு விதிக்கும் என்றும் பிரச்னைக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். இது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளை திருப்திப்படுத்தவும் அந்த நாடுகளின் நட்பு முறிந்துவிடாமல் இருப்பதற்காகவும்தான் என்பது தெளிவு.