÷கடந்த 60 ஆண்டுகளாக, கங்கையின் இரு கரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லோருமே இந்த ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். கங்கையை ஆக்கிரமித்து, ஆற்றுப் படுகையில் விடுதிகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டன. அதைப் பார்த்து, அப்பாவிப் பொதுமக்களும் விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் கட்டடங்களை எழுப்பினர். வீடுகள் அமைத்துக் குடியிருக்க முற்பட்டனர். கங்கையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் வாளாவிருந்தால் இவர்கள் என்னை ஓடையாக்கி விடுவார்களோ என்று பயந்து விட்டிருக்கலாம்.