÷நீதிவிசாரணையின் வரம்புகளாக, காவல்துறை அதிகாரிகளுக்குள் இருக்கும் ஜாதி உணர்வுதான் சிறு பிரச்னையை, சில ஊர்களின் பிரச்னையாக மாறச் செய்ததா; கட்டப்பஞ்சாயத்து நடந்து, அதில் பெண்ணின் தந்தை அவமானப்பட்டதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா; அப்படியானால் அவரை அவமானப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் யார்; இந்த ஒரு காதல் ஜோடிக்காக மட்டும்தான் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தினார்களா அல்லது இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்நிகழ்வாக இருந்ததுதான் இவர்களது இப்போதைய ஆத்திரத்துக்குக் காரணமா; சில ஆயிரம்பேர் ஒரு தாக்குதலை நடத்தக் கிளம்பும்போது, அது குறித்து எந்தத் தகவலும் காவல் துறைக்குக் கிடைக்கவில்லையா; கிடைத்திருப்பின், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, விடை கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே உண்மை வெளிவரும்.