தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழக வீரர்கள் சிலம்ப போட்டியில் கின்னஸ் சாதனைக்கு தேர்வு

மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 12:26 pm

மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர்.

மலேசிய சிலம்ப அகாடமி மற்றும் ஆசிய சிலம்ப அகாடமி சார்பில் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்ற நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் உள்பட தமிழகத்திலிருந்து 300 வீரர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், சுருள்வாள், தொடுசிலம்பம், ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் கேடயம், தீப்பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட பிரிவில் கலந்துகொண்டு 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். மேலும், 5 நிமிடம் தீப்பந்தம் சுற்றும் பிரிவில் உலகளவில் 300 பேர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 80 பேர் பங்கேற்ற நிலையில் அவர்கள், கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர். போட்டியில், வெற்றிபெற்று திரும்பிய சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.