தன் தந்தையின் மறைவை ஒட்டி ஆந்திரா முழுவதுமாக சுமார் 800 பேர் தற்கொலை செய்து கொண்டும், உடல் மற்றும் மனம் நலிவடைந்தும் மரணித்த செய்தியை அறிந்த போது, நான் என் தந்தை இறந்த இடத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் என் தந்தையின் நினைவாக மரணித்த ஒவ்வொருவர் வீட்டிற்கும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளிப்பதாக அறிவித்திருந்தேன். அதற்காக என் தந்தை வழியில் யாத்திரை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தேன். இது முற்றிலும் எமோஷனலாக நான் எடுத்த முடிவு. என் தந்தையின் மீது நான் கொண்ட அளப்பரிய பாசத்தின் வெளிப்பாடு இது. அவரது மறைவு காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பமும் என்னுடையதே, அவர்களை நான் நேரில் சந்திப்பதாக வாக்களித்ததில் எந்தவித அரசியல் நோக்கங்களும், காரணங்களும் முற்றிலுமாக இல்லை. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஆந்திர காங்கிரஸார் விஷயத்தை சோனியாவிடம் திரித்துச் சொல்ல, அவர் எனது யாத்திரையை இடையில் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். நானும் கட்சியின் ஹை கமாண்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு யாத்திரைக்கான விளக்கம் அளித்து ஒப்புதல் பெற நேரம் கேட்டேன். 6 மாதங்கள் காத்திருந்தேன். ஆனால், அவர்கள் ஒப்புதல் அளிக்காததோடு, என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கவும் இல்லை. இது என்னையும், என் தந்தையையும் அவமதிப்பது போல் இருந்தது. அதனால் மட்டுமே காங்கிரஸில் இருந்து பிரிவதாக முடிவெடுத்தேனே தவிர, என் தந்தை மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் மேலிடம் என்னை முதல்வராக்கவில்லை என்ற வருத்தத்தினால் இல்லை. - என்கிறார் ஜெகன்.