அதற்காக காலையில் வாசல் தெளித்துக் கோலமிடச் செல்லும் போதே, யாரோ ஒரு திருடன் வந்து சங்கிலி பறித்துக் கொண்டு போவான் என்ற எதிர்மறை உணர்வுடனே அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்ய முடியுமா? வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் போது, திடீரென யாரோ ஒருவர் குறுக்கிட்டு கழுத்தில் பகட்டாக மின்னும் சங்கிலியை இழுக்கப் போகிறார்கள் என்ற உணர்வுடனே வண்டியோட்டிச் செல்ல வேண்டுமா? அதெப்படி முடியும். அப்புறம் கவனம் சிதறி ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் எல்லா நேரங்களிலும் பயந்து, பயந்து சாக வேண்டியது தான் என்கிறீர்களா? இல்லை முன் ஜாக்கிரதைக்கு அர்த்தம் அதுவல்ல,