கொளத்தூரைச் சேர்ந்த ஆர். மணிவண்ணன் என்பவர், அந்த ரயிலைப் பற்றிய தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். முதல் முறை விண்ணப்பித்த போது இதற்கு பதில் அளிக்க மறுக்கப்பட்டது. அடுத்த விண்ணப்பத்துக்குக் கிடைத்த பதிலில், டோரன்டோ விரைவு ரயிலில் பயன்படுத்தப்படும் பெட்டிகள் 1992 முதல் 1999ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. இது தீவிரமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு ரயில் பெட்டியின் அதிகபட்ச ஆயுளே 25 ஆண்டுகள்தான். அதற்கு மேலும் பயன்பாட்டில் இருக்கும் இதுபோன்ற ரயில் பெட்டிகளை பழைய இரும்புப் பொருட்களாகப் போட வேண்டும்.