வங்கிகள் மாற வேண்டும்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை என்று சொல்வது, வங்கித் துறையின் சமீபத்திய நடவடிக்கைக்கு மிகப் பொருத்தமான ஒன்றாகும். கடந்த இரண்டு மாத காலத்தில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இரு முறை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.










