அன்பால் இணைய வேண்டும்!
இன்றைய காலகட்டத்தில் முக்கியப் பிரச்னையாக இருப்பது கணவனும் மனைவியும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதுதான். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்து விட்டு, அவர்கள் சேர்ந்து வாழ வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.










