சமத்துவ ஆராதனை
ஆக்ஸ்ஃபாம் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2004இல் இருந்து 2008 வரை பொருளாதார நிலை மோசமானது என்றும் இது உலக அளவில் பொருளாதார தேய்மானத்தின் விளைவு என்றாலும், அதே வருடங்களில் இந்தியாவின் லட்சக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 61ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 250 பில்லியன் டாலர் சொத்து விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்பது கசப்பான உண்மை.









