புதுக்கோட்டையின் அன்றைய ""மன்னர் (மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்) நீண்ட நாள்களாக வெளிநாடுகளில் தங்கி இருப்பதையும், அன்னிய (ஆஸ்திரேலிய) நாட்டுப் பெண்மணியை மணந்துகொண்டு, அவர் மூலம் பிறந்த சிட்னி மார்த்தாண்டனுக்கு ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதையும், இது இந்து தர்ம சாஸ்திரங்களுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டி, மக்கள் இதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமெனவும், அன்னிய மாதுவுக்குப் பிறந்த சிட்னி மார்த்தாண்டனை மன்னராக ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் சமஸ்தான மக்களைக் கேட்டுக் கொண்டார் (தீரர் சத்திய மூர்த்தி)'' என்று எழுதுகிறார் அரசு அருங்காட்சியக முன்னாள் உதவி இயக்குநர் டாக்டர் ஜெ. ராஜா முகமது. (புதுக்கோட்டை வரலாறு, அரசு அருங்காட்சியக வெளியீடு, எழும்பூர், சென்னை, நான்காம் பதிப்பு 2004, பக்கம் 178).