தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தொண்டர்களை மதிக்காத தலைமை

ஓருவழியாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவும், காங்கிரஸýம் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உ

Updated On :20 செப்டம்பர் 2012, 3:03 am

ஓருவழியாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவும், காங்கிரஸýம் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே.

சென்றமுறை சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போதே ஆட்சியில் பங்கு கிடைக்கும் என காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் எண்ணினர். ஆனால், காங்கிரஸின் தில்லி தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் மெüனம் சாதித்தனர். இதனால் திமுகவும் காங்கிரûஸக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

இதுமட்டுமல்லாமல் அரசுப் பணியிடங்கள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து, ஒப்பந்தப் பணிகள், டாஸ்மாக் மதுக்கூடம் அமைப்பதுவரை அனைத்தும் திமுகவினரே வைத்துக் கொண்டனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸôருக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை எனவும் மாறாக அதிமுகவினர் பலர் திமுக ஆட்சியில் பயனடைந்துள்ளனர் எனவும், அரசு விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸôர் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. இதற்குக் காரணம் திமுகதான் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துள்ளனர். இவ்வளவு நெருக்கடியிலும் திமுகவுடன் மீண்டும் கூட்டணி தேவையா? எனக் குரல் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களின் கருத்துகளை காங்கிரஸ் தொண்டர்கள் பெருவாரியாக வரவேற்றனர்.

மேலும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதும், ஆட்சியில் பங்கு தரமுடியாது என திமுக கூறியதும் காங்கிரஸ் தொண்டர்களைப் பெரிதும் பாதித்தது.

இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகும் என திமுக தலைமை அறிவித்ததும் தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களும், திமுக வினரும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவர்களுக்கு இடையே தேர்தல் களத்தில் தலைவர்கள் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்சியை முதுகில் தூக்கிச் சுமப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை. மூன்றாவது அணி அமைப்பது அல்லது தனித்து நிற்பது என்ற முடிவையே அவர்கள் விரும்புகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியை அறவே வெறுக்கின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தில்லி தலைமையும் தங்களது சுயலாபத்துக்காக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.

இதன் தாக்கம் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.